2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ரசீது!: தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லி: 2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ரசீது வழங்கும் முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை வெளிநாடுகளில் வாபஸ் பெறப்பட்டுவிட்டதாகவும் சுவாமி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ள ஓட்டைத் தடுக்கும் வகையில் 180 வாக்குச்சாவடிகளில் வாக்கு அளித்தவர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதனால் கள்ள ஓட்டைத் தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம் நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகு முழுமையான ரசீது முறை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வடிவமைக்க பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன், வாக்காளர்களுக்கு ரசீது வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை அமலாகும் என விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications