மாணவியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அசிங்கமாகப் பேசிய ஆசிரியர்
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அடாத செயலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.
வேங்கடத்தனூர் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருப்பவர் சுந்தரம். இவர் மீது ஏகப்பட்ட புகார்களை அப்பள்ளி மாணவியரும், அவர்களது பெற்றோர்களும் சுமத்தி வந்தனர். இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி ஜெயக்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து ஒரு பெரிய குழுவே பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளிவந்தன.
ஆசிரியர் சுந்தரத்தின் அடாத செயல்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது...
ஆசிரியைகள்- மாணவிகளிடம் ஆபாசப் பேச்சு
அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சுந்தரம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் ஆபாச வார்தைகளை அவர் பேசி வந்துள்ளார்.
செக்ஸியாக இருக்கிறாய் என்று கூறி முத்தம்
மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மாணவி ஒருவரை பார்த்து, நீ மிகவும் செக்சியாக இருக்கிறாய் என்று கூறி வகுப்பறையிலேயே முத்தம் கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.
உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை
அவர் செய்து வந்த பாலியல் தொல்லை குறித்து அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நடவடிக்கை இல்லாவிட்டால் பள்ளியை மூடுவோம்
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சுந்தரம் மீது 4 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை மூடி போராட்டம் நடத்துவோம் என்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications