தமிழகத்துக்கு ராகுல்ஜி வந்தா புத்துணர்ச்சி கிடைக்கும்...: காங்கிரஸார் அழைப்பு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகிவிட்ட ராகுல் காந்தி, அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸாருடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி செயலர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற மீண்டும் நீங்கள் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மாற்றத்தின்போது பொதுச் செயலாளர், செயலாளர் பதவிகளுக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திராகாந்தி காலம் முதல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்ட நிறையபேர் தமிழகத்தில் உள்ளனர். முன்னாள் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் பதவிகள் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கூறியுள்ளோம் என்றார்.
இதே கருத்தை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தெரிவித்திருக்கின்றனர். அப்ப ராகுல் வந்தா 2014, 16-ல் தமிழகத்தில் காங்கிரஸுக்கு "அமோகம்"தானோ?












Click it and Unblock the Notifications