அனைத்து வளமும் கொண்ட தமிழ் ஏன் மத்திய ஆட்சி மொழியாகக் கூடாது?: கருணாநிதி கேள்வி

சென்னை திருவான்மியூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று பேசிய கருணாநிதி கூறியதாவது:
ஹிந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது என்று சொல்கிறார்கள். ஹிந்தி படித்த வடநாட்டினர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். ஹிந்தி படிப்பதால் நமது தாய்மொழியான தமிழ்மொழி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும், ஆட்சிமொழியாகாது.
தமிழ் தொன்மையானது
நாட்டில் எல்லா மொழிகளுக்கும் ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு. தங்கள் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று ஒவ்வொரு மாநில மக்களும் ஆசைப்படலாம். அது நடைமுறையில் முடியாது என்றால், எந்த மொழியெல்லாம் ஆக முடியுமோ அதை ஆட்சி மொழியாக்குங்கள். அப்படி மற்ற மொழிகளால் முடியாவிட்டால் இலக்கண வளம், இலக்கிய வளம், கவிதை வளம் என இத்தனை வளமும் பெற்ற எங்கள் தமிழுக்கு ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு. தமிழுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய, இலக்கண வளமும் உண்டு.
அண்ணாவின் ஆசையை நிறைவேற்ற திட்டம்
தமிழை ஆட்சி மொழியாக்குங்கள் என்று திருச்சியிலே நடைபெற்ற திமுக மாநாட்டில் அண்ணாவும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற மக்களெல்லாம் யார் யார் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஏற்றுக்கொள்கிற மொழியாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் திட்டம்.
டெல்லியில் யார் அமர்ந்தாலும் தமிழுக்கு கெடுதல் செய்யக்கூடாது. தமிழுக்கு கடுகளவு துன்பம் வந்தாலும் தமிழன் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டான்.தமிழை மட்டும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
செம்மொழிக்கு எதிரான ஜெ
தமிழை செம்மொழியாக்குவதற்குக் கூட சிலபேர் தகுதிகள் இல்லை என்று வாதாடினார்கள். ஹீப்ரு, லத்தீன் போன்ற மொழிகள் எல்லாம் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில், தமிழுக்கும் செம்மொழி தகுதி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கேட்டேன். அதை ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா செம்மொழிக்கு எதிராக உள்ளார்.
இருளாட்சி நடைபெறுகிறது.
தமிழ் உணர்வைப் பட்டுபோகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்சி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு சரியான பட்டப் பெயர் வைக்க வேண்டுமானால் இருளாட்சி என்று வைக்கலாம் என்றார் கருணாநிதி.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications