குடியரசு தின நாளில் அசாமில் 8, மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்புகள்!
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் குடியரசு தின நாள் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் உல்பா தீவிரவாத அமைப்பினரால் 2 மாவட்டங்களில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பது தனிநாடு கோரும் உல்பா தீவிரவாத அமைப்பினரின் கோரிக்கை. இதனால் ஆண்டு தோறும் குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
நேற்றும் அசாமின் கோல்பாரா, துப்ரி மாவட்டங்களில் 8 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கோல்பாரா மாவட்டத்தில் அகில இந்திய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் எம்.எல்.ஏ. மொய்னுதீன் அகமது என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மக்கள் கூடும் சந்தைப் பகுதிகளிலும் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன.
குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மணிப்பூர் மாநிலத்திலும் 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications