விஸ்வரூபம் ஓடலைனா எதுவும் ஓடக்கூடாது: பாலக்காட்டு தியேட்டர்களை மூட வைத்த சிபிஎம் இளைஞரணி
திருவனந்தபுரம்: விஸ்வரூபம் ஓடவில்லை என்றால் வேறு எந்த படமும் ஓடக் கூடாது என்று கூறி பாலக்காட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட வைத்துள்ளது சிபிஎம் இளைஞர் அணியான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு.
விஸ்பரூபம் திட்டமிட்டபடி கடந்த 25ம் தேதி கேரளாவில் தான் ரிலீஸ் ஆனது. இதனால் படத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் அங்கு சென்றனர்.
ஆனால் கேரளாவிலும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் படம் தியேட்டர்களில் ஓடுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். விஸ்வரூபம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பாலக்காட்டில் உள்ள ஒரு தியேட்டர் விஸ்வரூபம் படத்தை ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த சிபிஎம் இளைஞர் அணியான இந்திய ஜனநாயக கூட்டமைப்பினர் கமல் படம் ஓடவில்லை என்றால் எந்த படமும் ஓடக் கூடாது என்று கூறி பாலக்காட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடச் செய்தனர்.
இதற்கிடையே எர்ணாகுளம், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் விஸ்வரூபம் படத்தை திரையிட ஒரு சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் சில முஸ்லிம் அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.












Click it and Unblock the Notifications