கர்நாடகத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை, மகா அமைதி நிலவுகிறது.. ராஜ்நாத் சிங்

கர்நாடகத்தில் எதியூரப்பா தனியாகப் போய் தனிக் கட்சி ஆரம்பித்து விட்டார். முன்பு உள்ளுக்குள் இருந்து கொண்டே குடைந்து வந்த அவர் தற்போது வெளியிலிருந்து பாஜகவை வெறுப்பேற்றி வருகிறார். அவரது ஆதரவாளர்கள் படிப்படியாக ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் அரசு கவிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் உள்ளே எதுவும் நடக்கவில்லை, எல்லாம் அமைதியாக இருக்கிறது என்பது போல பேச ஆரம்பித்துள்ளனர் கர்நாடக பாஜக தலைவர்களும், அகில இந்திய தலைமையும்.
இருப்பினும் எதியூரப்பா ஆதரவாளர்களான 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஷெட்டர் அரசுக்கு நல்ல விஷயமல்ல என்பதால் கர்நாடக பாஜக சற்றே பீதியுடன் உள்ளது. இந்த நிலையில் ஷெட்டர் டெல்லிக்குக் கிளம்பி வந்துள்ளார்.
டெல்லி வந்த அவர் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து பேசினார். பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. எங்களது அரசு முழுப் பதவிக்காலத்தையும் நிறைவேற்றும் என்றார்.
ஷெட்டர் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கட்சித் தலைவராக பொறுப்பேற்றதற்காக ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன். அவருடைய ஆசியையும் பெற்றேன் என்றார்.
மடாதிபதிகளின் ஆசியை நாடும் ஷெட்டர்
இதற்கிடையே மறுபக்கம் மடாதிபதிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் குதித்துள்ளார் ஷெட்டர். இதுவரை 65க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், சாமியார்களின் ஆதரவை அவர் கலெக்ட் செய்து விட்டாராம். பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த மடாதிபதிகளாம் இவர்கள்.
எதியூரப்பாவும் இப்படித்தான் தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் மடாதிபதிகள், சாமியார்களின் ஆதரவை உறுதி செய்து கொள்வார். அதே பாணியில் தற்போது எதியூரப்பாவால் ஏற்பட்ட சிக்கலிலிருந்து தப்பிக்க சாமியார்களை நாட ஆரம்பித்துள்ளார் ஷெட்டர்.
கிட்டத்தட்ட 65 மடாதிபதிகளை தனது வீட்டுக்கு அழைத்து நேற்று அவர் பேசினார். அவர்களின் ஆதரவையும், ஆசியையும் அவர் பெற்றார். இந்த மடாதிபதிகளில் பெரும்பாலானவர்கள் தலித், எஸ்.டி, மற்றும் பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications