ராஜபக்சேவின் அமைச்சரவை மாற்றியமைப்பு: 5 பேர் புதிதாக சேர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார். பிரதமர் பதவியில் ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் அப்படியான மாற்றம் ஏற்படவில்லை.
ராஜபக்சே அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு 5 பேர் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அமைச்சர்கள் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் டி.எம்.ஜெயரத்னேவின் மருமகன் துமிண்டா திசநாயகே உள்பட 5 துணை அமைச்சர்களுக்கு கேபினட் தகுதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமராக ஜெயரத்னே தொடருகிறார்.
அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டும் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதாலும் மொத்தம் 10 கேபினட் அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 துணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications