விஸ்வரூபம் தடையை தமிழக அரசு விலக்க வேண்டு: சி.பி.எம். வேண்டுகோள்
சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் கலைத்துறையிலும் தனிப்பட்ட முறையிலும் மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்தி பிடித்து வருபவர். கடந்த காலத்தில் அவருடைய செயல்பாடுகள் இதற்கான சாட்சியாக அமைந்துள்ளது.
உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் திரைப்பட தணிக்கை துறை ஒரு படத்தை தணிக்கை செய்து வெளியிட்ட பிறகு அதை தடை செய்வது சரியல்ல என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றது.இந்தநிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்ட பூர்வமாகவும் தார்மீக ரீதியிலும் நியாயமானதல்ல.
எனவே விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை உடனடியாக விலக்கி கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications