பிரணாபை சந்தித்து டெசோ தீர்மானம், மனு அளித்த மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

திமுக பொருளாளர் முக ஸ்டாலின் டெசோ அமைப்பு குழுவினருடன் டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தமிழகத்தில் நடத்தப்பட்ட டெசோ மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரணாபிடம் வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து ஸ்டாலின் பிரணாபிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இலங்கையில் நிலவி வரும் சூழலை மாற்றி ஈழத்தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டு சமத்துவம், அமைதி நிறைந்த வாழ்வு வாழ இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெசோ தீர்மானங்களை மு.க. ஸ்டாலின் ஐ. நா.விடமும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications