கோவையில் 12 பெட்ரோல் வெடிகுண்டுகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் 12 பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கோவை, ஆசாத் நகர் பகுதியில் நேற்று இரவு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது குப்பைமேடு ஒன்றில் சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அங்கு ரோந்து போலீஸார் விரைந்து சென்றனர். இதைப் பார்த்த அந்த நால்வரும் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த இடத்தில் போலீஸார் சோதனையிட்டபோது அங்கு 12 பெட்ரோல் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மனிதநேயமக்கள் கட்சி மாநாடு விரைவில் கோவையில் நடைபெறவுள்ளது. இதை சீர்குலைக்க சில விஷமிகள் இதைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications