குமரி மாவடத்தில் ஆயிரக்கணக்கானோரை முடக்கிய சிக்குன் குனியா

Subscribe to Oneindia Tamil

குமரி: குமரி மாவட்டத்தில் சிக்குன் குனியாவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் குக்கிராமங்களில் இருந்து நகர்புறம் வரை சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அவைரையும் டெங்கு தொற்றிக்கொள்ளும் அபாய நிலை உள்ளது. இது தவிர வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிக்குன் குனியா, டெங்கு போன்ற வைரஸ் வியாதிகளால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்படும்போது பொருளாதார பலம் இல்லாத பலரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் கொசுத் தொல்லையை ஒழிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வியாதிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. சிக்குன் குனியா, வைரஸ் கிருமிகளால் பரவுவதால் அதற்கென்று தனியாக மருத்துவம் கிடையாது. அதே நேரம் நிலவேம்பு, பப்பாளி இலை கசாயம் குடிப்பதால் மனிதனுடைய எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அணுக்கள் அதிகமாகி தேகத்தின் வியாதி எதிர்ப்புத்தன்மை அதிகரித்து சிக்குன் குனியா தாக்காமல் இருக்குமென்றும் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் மருத்துவமனைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு கசாயத்தை அருந்தி இந்த வியாதிகளிலிருந்து விடுபட மக்கள் முயற்சி செய்கின்றனர். காய்ச்சலின் தாக்கத்தில் இருந்து விடுபட திருவனந்தபுரம் வரை சென்று பலர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்குன் குனியா தாக்கப்பட்டவர்கள் அதன் பின்விளைவுகளான முட்டுவலி, கால்வீக்கம், கைவீக்கம், உடம்புவலி, கை கால் உளைச்சல், நடக்க முடியாத நிலை, காலை கடன்களை கழிப்பதற்கு கூட முடியாமல் தவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+