லோக்பால் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்பால் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
லோக்பால் மசோதா கடந்த டிசம்பர் மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் இம் மசோதா நிறைவேற்றப்படவில்லை.மேலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பது பற்றி அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா தொடர்பாக இன்று விவாதித்த மத்திய அமைச்சரவை பின்னர் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து ராஜ்யசபாவில் இம் மசோதா தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் லோக்சபாவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications