சென்னையில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் காதலை ஏற்க மருத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள ஸ்ரீ இணையதள மையத்தில் ஒன்றில் பணியாற்றி வந்த அந்த இளம்பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்த வந்த விஜயபாஸ்கர், காதலை ஏற்க மறுத்த பெண் மீது கோபமடைந்தார். நேற்றைய தினம் அந்த பெண் வேலை பார்க்கும் இணையதள மையத்திற்கு வந்த விஜயபாஸ்கர் திடீரென அந்த பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார்.

இதில், அந்த பெண்ணின் முகம், முதுகு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

இதையடுத்து, விஜயபாஸ்கர் மீது ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் கேன்டீன் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் பாரிமுனைப் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ஆசிட் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் காரைக்காலில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வினோதினியின் நினைவுகள் கூட நம் மத்தியில் இன்னும் மறையவில்லை. நேற்றுதான் தான் அவர் தாக்கப்பட்ட வழக்கில் காரைக்கால் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் அதேபோன்று ஒரு கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+