Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 ஐ.ஜி., 3 டி.ஐ.ஜி.க்கள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காவல் துறையில் 2 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்த வன்னியப் பெருமாள்​ சென்னை மாநில குற்ற ஆவண காப்பக பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்த பாலசுப்பிரமணியன்​ சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எம்.சி. சாரங்கன்​ சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலர் பாரி​ சென்னை சமூக நீதித்துறை டி.ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல தலைமை விழிப்புப் பணி அலுவலர் பணியில் இருந்த மெளரியா​ சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புப் படை கண்காணிப்பாளராக மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+