தமிழகத்துக்குள் நுழைய முயற்சி- வாட்டாள் நாகராஜை கைது செய்தது கர்நாடகா!
கோபி: தமிழக எல்லையான தாளவாடிக்குள் நுழைய முயன்ற கன்னட சாலூவாலியா பட்சா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை கர்நாடகா போலீஸ் கைது செய்துள்ளது.
விபத்து
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி தொட்டகஞ்சனூரில் டிவைன் மெட்ரிக்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சந்தியா மற்றும் குஷ்மு ஆகியோர் கடந்த 7-ந் தேதி பள்ளி முடிந்து வெளியேறினர். அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் டேவிட், லூர்து என்ற இருவரும் வாகனம் ஓட்டிப் பழகினர். அவர்களது வாகனம் மாணவிகள் மீது மோதியதில் சந்தியா சம்பவ இடத்தில் பலியானார்.
கலவரம்- கர்நாடாகவினர் கைது
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தாக்குதலுக்குள்ளாகின. இந்தத் தாக்குதலில் இருந்து காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையும் தப்பவில்லை. இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் சிவசங்கரன் உட்பட மொத்தம் 61 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
தாளவாடியில் ஆர்ப்பாட்ட அறிவிப்பு
கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்கக் கோரி தமது அமைப்பின் சார்பில் தமிழக எல்லைப் பகுதியான தாளவாடியில் வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
தாளவாடியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று சத்தியமங்கலம் டி.எஸ்.பி., முத்துசாமி மற்றும் தாசில்தார் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர். இதை ஏற்று விசாரணை நடத்திய கோபி வட்டாட்சியர் பழனிச்சாமி, வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் தமிழக எல்லைக்குள் நுழைய ஒரு மாத கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை தாளவாடி போலீசார் வாட்டாள் நாகராஜிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தமது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது.
நுழைய முயற்சி
இந்நிலையில் இன்று தாளவாடியில் தமிழக எல்லையான பார்வதிபுரம் அருகே தனது ஆதரவாளர்களுடன் வாட்டாள் நாகராஜ் தமிழகத்துக்குள் நுழைய தயாராக இருந்தார் அப்போது அங்கு கர்நாடக போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications