வட சென்னையின் பயங்கர ரவுடி காட்டான் மோகன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னையைச் சேர்ந்த பயங்கர ரவுடி காட்டான் மோகன் என்பவன் உள்பட 10 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரவுடிகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளனர். ஏரியாவுக்கு 10 ரவுடிகள் நிரந்தரமாக ரவுடித்தனம் செய்தபடிதான் உள்ளனர். ஆனால் அவர்களைப் போலீஸார் பெரும்பாலான நேரங்களில் பிடிப்பதில்லை. திடீர் திடீரென ரவுடிகள் வேட்டையில் குதித்து உள்ளே போடுவார்கள்.

இந்த நிலையில் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரவுடிகளைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர் போலீஸார்.

வட சென்னையில் காட்டான் மோகன் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவன் அப்பகுதியில் பெரும் ரவுடியாக நீண்ட காலமாக வலம் வந்தவன். 3 கொலை உள்பட பல்வேறு வழக்குகளை தாங்கி நிற்பவன். இதேபோல மேலும் 9 ரவுடிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோல கஞ்சா கடத்திய 6 பேர், கள்ளத்தனமாக மது விற்ற 6 பேர், ரேஷன் அரிசி கடத்திய 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+