ராஜஸ்தான்.. பாஜக முதல்வர் வேட்பாளர் வசுந்தரராஜே சிந்தியா!

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவில் நீண்டகாலமாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. பாஜகவின் மாநிலத் தலைவராக கத்தாரியா இருந்து வந்தார். அவர் வசுந்தரராஜே சிந்தியாவை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சி பெரும் பிளவை சந்திக்க இருந்தது. வசுந்தரராஜே சிந்தியாவுடன் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிடுவர் என்றும் கூறப்பட்டது.
ராஜஸ்தான் மாநில பாஜகவைப் பொறுத்தவரையில் வசுந்தராஜே சிந்தியா மட்டுமே தலைவர்- முதல்வர் வேட்பாளர் என்றே அவரது ஆதரவாளர்கள் முழங்கிவந்தனர். ஆனால் கத்தாரியா ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜகவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத்சிங் டெல்லியில் ராஜஸ்தான் மாநில பாஜக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக, முதல்வர் வேட்பாளராக வசுந்தரராஜே சிந்தியாவை அறிவித்தார். மேலும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கத்தாரியாவையும் அவர் அறிவித்தார்.
இம்முடிவு குறித்து கருத்து தெரிவித்த வசுந்தரராஜே, கட்சித் தலைமையின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு குடும்பமாக இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications