ஜார்க்கண்ட்டில் எப்படியாவது ஆட்சி அமைக்க இன்னமும் போராடும் ஜே.எம்.எம்.!
ராஞ்சி: குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் எஞ்சிய சட்டசபையின் பதவிக் காலத்திலாவது ஆட்சி அமைத்துவிட முடியாதா என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி போராடி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் அர்ஜூன் முண்டாஅரசுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 19-ந் தேதியன்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும் சட்டசபையின் எஞ்சிய பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஒரு அரசை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதீர் மஹ்தோ, புதிய அரசு அமைக்க எங்கள் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம். விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications