ஃபேஸ்புக்கில் பிரதமர் பற்றி கார்டூன்: லக்னோ சிவில் இஞ்ஜினியர் கைது!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: பிரதமர் மன்மோகன்சிங் பற்றி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக உத்தரப்பிரதேச மாநில சிவில் இஞ்னியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் கபில்சிபல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் உள்ளிட்டோரை பற்றிய சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வெளியிட்டதாக லக்னோவைச் சேர்ந்த அந்த சிவில் இஞ்னியர் மீது புகார் கூறப்பட்டது. இதேபோல் ஆட்சேகபரமான கருத்துகளையும் அவர் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாவதைத் தடுக்கும் வகையில் அந்த சிவில் இஞ்னியர் கைது செய்யப்பட்டார் என்று உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications