காவிரி பிரச்சனை: பெங்களூரில் ஷெட்டர் தலைமையில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்
பெங்களூர்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரம் குறித்து பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வரும் 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து நேற்று கர்நாடக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 6ம் தேதி(இன்று) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார். அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூரில் சில நிமிடங்களுக்கு முன்பு துவங்கியது.
ஷெட்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நீர்பாசன அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்ட அமைச்சர் சுரேஷ், கர்நாடக சட்டசபை சபாநாயகர் போப்பையா, எதிர்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications