நெல்லையில் 3 நாள் மீன் உணவு திருவிழா
நெல்லை: நெல்லையில் 3 நாள் மீன் உணவுத் திருவிழா நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நீர்வள உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய இயக்குனர் ஹனீபா நிருபர்களிடம் கூறுகையில்,
நெல்லையில் 3 நாட்கள் மீன் உணவு திருவிழா நாளை (7ம் தேதி) தொடங்குகிறது. பாளை நூற்றாண்டு மண்டபம் எதிரேயுள்ள கிங்ஸ் ராயல் கோர்ட் அரங்கில் துவங்கும் இந்த நிகழ்ச்சியை மேயர் விஜிலா துவங்கி வைக்கிறார்.
துவக்க நாளன்று விறால் மீன் வளர்ப்பு பயிற்சி குறித்து விளக்கப்படுகிறது. உணவு மீன்கள், மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவு பொருட்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்கள், மீன் உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன.
8ம் தேதி மாலை 4 மணி முதல் 8 மணி வரை சமையல் கலைஞர் தாமு மீன் உணவு தயாரிப்பு முறை குறித்து பெண்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டுகிறார். 9ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பள்ளி, கல்லூரி, பெண்கள், சுய உதவி குழுவினர் தங்கள் வீடுகளில் தயாரித்த மீன் உணவுகளை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த மீன் உணவுகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. நெல்லை மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் நி்றைவு விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார். தூய சவேரியர் கல்லூரி, நெல்லை மாவட்ட அறிவியல் மையம், கிங்ஸ் உணவகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications