தர்மபுரி... மருமகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த மாமானார் கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மருமகளிடம் பாலியல்ரீதியாக மிரட்டல் விடுத்தும்,சேஷ்டை செய்தும் வந்த மாமானாரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த மொளப்பனஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேசன். வெங்கடேசனின் மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

காளியம்மாள் அப்பகுதியில் சீட்டுப் பிடித்து வந்தாராம். அதில் கிடைத்த ரூ.20,000 பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்ட வெங்கடேசன் தலைமறைவாகி விட்டார். இதனால் காளியம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

அதை விட பேரதிர்ச்சியாக, தனியாகத்தானே இருக்கிறாய், என்னுடன் உல்லாசமாக இரு என்று மாமானார் சென்னகிருஷ்ணன் மிரட்டி தனது ஆசைக்குப் பணியுமாறு கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளார். அதற்கு மறுத்த காளியமமாளை அவர் அடித்து சித்திரவதை செய்தாராம்.

மேலும் காளியம்மாளின் நடத்தை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவதூறாகவும் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து தனது சித்தப்பா வீட்டுக்குத் தப்பிப் போனார் காளியம்மாள். மேலும் தனது மாமனார் மீது தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரைப் பெற்ற போலீஸார் மாமனார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+