ஆஸ்திரேலியாவில் பட்டொளி வீசிப் பறந்த தமிழ் ஈழ தேசியக் கொடி

Subscribe to Oneindia Tamil

Tamil Eelam flag hoisted in Australia
மெல்போ்ர்ன்: தமிழ் ஈழ தேசியக் கொடி ஆஸ்திரேலியாவில் ஏற்றப்பட்டுள்ளது. இதில் ஏராளமான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஈழத் தமிழர்கள் இலங்கையின் சுதந்திர தின விழாவைப் புறக்கணித்துள்ளனர். மாறாக தமிழ் ஈழத் தேசியக் கொடியை பறக்க விட்டு அதைக் கொண்டாடினர்.

மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் என்ற நகரில் உள்ள தொழிற்சங்க கட்டிடத்தில் தமிழ் ஈழ தேசிய கொடி ஏற்றும் விழா நடத்தப்பட்டது. இதில் ஜீலாங் தொழிற் சங்கத்தினருடன் இடது சாரி அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

கொடியை ஜீலாங் தொழிற் சங்க செயலாளர் டிம் கூடன் ஏற்றி வைத்தார். தமிழ் ஈழ தேசிய கொடி பற்றிய விளக்கத்தை நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் எம்.பி.யும், தீவிர தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான டொமினிக் சந்தியா பிள்ளை வாசித்தார்.

ஜீலாங் நகரில் உள்ள 2-வது உயரமான கொடி கம்பத்தில் தமிழ் ஈழ தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. சில வாரங்கள் இக்கொடி இங்கு பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியி்ல ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+