கற்பழிப்பில் நம்பர் ஒன் நகரம் டெல்லி: சென்னைக்கு 4வது இடம்
டெல்லி: கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தலைநகர் டெல்லியில் தான் அதிக கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமும் செய்தித்தாளை பிரித்தால் அங்கு கற்பழிப்பு, இங்கு கற்பழிப்பு என்று ஒரே கற்பழிப்பு செய்திகளாக உள்ளன. இந்த நிலை ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர் கதையாகிவிட்டது. டெல்லியில் பிசியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்ட பிறகு தான் பல கற்பழிப்பு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்குகளின் விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் டெல்லி
தலைநகரான டெல்லியில் 2009ல் 404 கற்பழிப்பு வழக்குகளும், 2010ல் 414 வழக்குகளும் மற்றும் 2011ல் 453 வழக்குகளும் பதிவாகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் போகிறது.

2வது இடத்தில் மும்பை
மும்பையில் கடந்த 2009ம் ஆண்டில் 182 கற்பழிப்பு வழக்குகளும், 2010ல் 194ம் மற்றும் 2011ல் 221 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பெங்களூருக்கு 3வது இடம்
ஐடி நகரமான பெங்களூரில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம், 2009-65, 2010-65, 2011- 97 வழக்குகள்.

4வது இடத்தில் சிங்கார சென்னை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 2009ல் 39 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 20010ல் 47கவும், 2011ல் 76கவும் அதிகரித்துள்ளது.

5வது இடத்தில் ஹைதராபாத்
ஹைதராபாத்தில் 2009ல் 47 கற்பழிப்பு வழக்குகள் பதிவானது. இந்த எண்ணிக்கை 2010ல் 45க குறைந்து 2011ல் 59க அதிகரித்துள்ளது.

6வது இடத்தில் கொல்கத்தா
கொல்கத்தாவில் 2009ல் 42 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில் மறு ஆண்டு 32க அந்த எண்ணிக்கை குறைந்தது. பரவாயில்லையே வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதே என்று நினைக்கையில் 2011ல் 46 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications