நீதிபதி விடுப்பில் சென்றதால் சங்கரராமன் கொலை வழக்கு 13ம் தேதிக்கு தள்ளிவைப்பு
புதுச்சேரி: காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி முருகன் விடுப்பில் சென்றுள்ளதால் விசாரணை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான தனது வாதத்தை கடந்த 18ம் தேதி துவக்கினார். கடந்த 24ம் தேதியும் அவரின் வாதம் தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசராித்து வந்த நீதிபதி முருகன் விடுப்பில் சென்றுள்ளதால் கூடுதல் சார்பு நீதிபதி மோகன்தாஸ் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நேற்றைய விசாரணையின்போது சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 7 பேர் மட்டுமே ஆஜரானார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications