நீதிபதி விடுப்பில் சென்றதால் சங்கரராமன் கொலை வழக்கு 13ம் தேதிக்கு தள்ளிவைப்பு
புதுச்சேரி: காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி முருகன் விடுப்பில் சென்றுள்ளதால் விசாரணை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான தனது வாதத்தை கடந்த 18ம் தேதி துவக்கினார். கடந்த 24ம் தேதியும் அவரின் வாதம் தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசராித்து வந்த நீதிபதி முருகன் விடுப்பில் சென்றுள்ளதால் கூடுதல் சார்பு நீதிபதி மோகன்தாஸ் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நேற்றைய விசாரணையின்போது சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 7 பேர் மட்டுமே ஆஜரானார்கள்.












Click it and Unblock the Notifications