காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 இழப்பீடு: சட்டசபையில் ஜெ. அறிவிப்பு

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத முடிவில் தமது பதிலுரையில் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ541 கோடி கூடுதல் செல்வாகும். மேலும் 50% க்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்படும். 50%க்கு கீழே இழப்பு இருப்பின் இழப்புக்கேற்ப நிவாரணத் தொகை வழங்கப்படும்.
காவிரி டெல்டாவில் ரூ181 கோடி செலவில் 15 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படும். காவிரி டெல்டாவில் ரூ1336 கோடியில் இதர வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களுமே வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படுகிறது. வறட்சியால் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் நிலவரி ரத்து செய்யப்படுகிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபையில் மத்திய அரசு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குப் அதிலாக 150 நாட்கள் வேலை வழங்கப்படும்.
தமிழக விவசாயிகள் வறட்சியால் எவரும் தற்கொலை செய்யவில்லை. இருப்பினும் தற்கொலை செய்ததாக சொல்லப்படுகிற 9 விவசாயிகளின் குடும்பங்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு தலா ரூ3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications