நேற்று பிறந்தது பாம்பு புத்தாண்டு: சீனர்கள் உற்சாக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

சீனாவில் புத்தாண்டை விலங்குகளின் பெயர்களில் கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு டிராகன் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. டிராகன் ஆண்டு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதையடுத்து சீன மக்கள் நேற்று முன்தினம் டிராகன் ஆண்டுக்கு விடை கொடுக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று பாம்பு புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சீன மக்கள் பாம்பு போன்ற வடிவங்களை செய்து கொண்டாடுகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் 10 நாட்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்றனர். உலகெங்கிலும் உள்ள 134 கோடி சீனர்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டையொட்டி அவர்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.












Click it and Unblock the Notifications