குஜராத்: 90% முஸ்லிம்கள் வாழும் நகராட்சியை கைப்பற்றிய பாஜக
அகமதாபாத்: குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் துவாரகா மாவட்டத்தில் சலாயா என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நகராட்சியை பாஜக கைப்பற்றியிருக்கிறது.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இத்தேர்தலில் 90% முஸ்லிம்கள் வசிக்கக் கூடிய சலாயா நகராட்சிக்கான 27 வார்டுகளிலும் பாஜக போட்டியிட்டது. 24 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டது. வாக்குப் பதிவுக்கு முன்பாகவே 4 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
23 வார்டுகளில் காங்கிரஸும் பாஜகவும் போட்டியிட்டன. அனைத்து வார்டுகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. அத்துடன் 3 வார்டுகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்திருக்கிறது.
சலாயாவில்தான் எஸ்ஸார் நிறுவனத்தின் முதலாவது அனல் மின் நிலையம் செயல்படுகிறது. இதன் மூலம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் பெரும்பகுதியான மின்சாரமும் குஜராத் மாநில அரசுக்கே விற்பனை செய்யப்பட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications