அமெரிக்கா நிராகரித்ததை இந்தியா ஏன் வாங்கியது.. ஹெலிகாப்டர் ஊழலில் 'விஸ்வரூப' கேள்விகள்!

முக்கியப் பிரமுகர்களுக்காக இந்தியா ரூ. 3,546 செலவில் வாங்கிய 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவில் ரூ. 450 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், முன்னாள் விமானப் படைத் தளபதி தியாகியின் குடும்பத்தினருக்கும் லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த ஹெலிகாப்டர்களை 2009ம் ஆண்டு அமெரிக்க கடற்படை வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், இவற்றின் தரத்தோடு ஒப்பிட்டால் இதன் விலை மிக மிக அதிகம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட ஒபாமா, இந்த ரகத்தைச் சேர்ந்த 28 ஹெலிதாப்டர்களை வாங்கும் திட்டத்தை நிராகரித்துவிட்டார்.
மேலும் இந்த புதிய ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஹெலிகாப்டர்களை மேம்படுத்தும் பணிக்காக ஒதுக்கிவிட்டார்.
ஆனால், இதைத் தான் இந்திய விமானப் படை, ரூ. 450 லஞ்சம் கைமாறிய நிலையில், வாங்கியுள்ளது.
மொத்தம் 12 ஹெலிகாப்டர்களுக்கு பணம் தரப்பட்டுவிட்ட நிலையில் 3 ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தும் விட்டது இத்தாலிய நிறுவனம். மற்றவை அடுத்த சில மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருந்தன. இந் நிலையில் தான் லஞ்ச விவகாரம் வெடித்துவிட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன.
1. இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகியும் ஏன் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவில்லை
2. இத்தாலி அரசு இதில் நடவடிக்கைகள் எடுத்த பின்னர் தான் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கண் விழிக்க வேண்டுமா?
3. ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் எந்த ஊழலுக்கும் இடம் இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறிக் கொண்டே இருக்கிறார். அதையும் தாண்டி இந்த ஊழல் நடந்தது எப்படி?
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications