அமெரிக்கா நிராகரித்ததை இந்தியா ஏன் வாங்கியது.. ஹெலிகாப்டர் ஊழலில் 'விஸ்வரூப' கேள்விகள்!

முக்கியப் பிரமுகர்களுக்காக இந்தியா ரூ. 3,546 செலவில் வாங்கிய 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் இப்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியாவில் ரூ. 450 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், முன்னாள் விமானப் படைத் தளபதி தியாகியின் குடும்பத்தினருக்கும் லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த ஹெலிகாப்டர்களை 2009ம் ஆண்டு அமெரிக்க கடற்படை வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், இவற்றின் தரத்தோடு ஒப்பிட்டால் இதன் விலை மிக மிக அதிகம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட ஒபாமா, இந்த ரகத்தைச் சேர்ந்த 28 ஹெலிதாப்டர்களை வாங்கும் திட்டத்தை நிராகரித்துவிட்டார்.
மேலும் இந்த புதிய ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஹெலிகாப்டர்களை மேம்படுத்தும் பணிக்காக ஒதுக்கிவிட்டார்.
ஆனால், இதைத் தான் இந்திய விமானப் படை, ரூ. 450 லஞ்சம் கைமாறிய நிலையில், வாங்கியுள்ளது.
மொத்தம் 12 ஹெலிகாப்டர்களுக்கு பணம் தரப்பட்டுவிட்ட நிலையில் 3 ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தும் விட்டது இத்தாலிய நிறுவனம். மற்றவை அடுத்த சில மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருந்தன. இந் நிலையில் தான் லஞ்ச விவகாரம் வெடித்துவிட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன.
1. இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகியும் ஏன் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவில்லை
2. இத்தாலி அரசு இதில் நடவடிக்கைகள் எடுத்த பின்னர் தான் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கண் விழிக்க வேண்டுமா?
3. ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் எந்த ஊழலுக்கும் இடம் இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறிக் கொண்டே இருக்கிறார். அதையும் தாண்டி இந்த ஊழல் நடந்தது எப்படி?
-
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications