ஒடிஷாவில் 3 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராமத்தினர்
சுந்தர்கார்: ஒடிஷாவில் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு 3 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.
ஒடிஷா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ளது அம்பாபடா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சூனியம் செய்வதாக உள்ளூர்காரர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிலர் அப்பெண்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை வெளியே இழுந்து வந்து தாக்கினர். பின்னர் அந்த 3 பேரையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு ஒரு கூட்டம் போட்டு அந்த 3 பெண்களும் சூனிய வேலை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே சிலர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களையும் காப்பாற்றி இது தொடர்பாக பிரஃபுல்லா பார்லா, அனி பா மற்றும் சஞ்சம் சோரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்துமாறு சுந்தர்கார் எஸ்.பி. போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications