வினோதினி வழக்கில் போலீசின் அலட்சியம்…!

Subscribe to Oneindia Tamil

Vinothini
சென்னை: காரைக்கால் இளம்பெண் வினோதினி வழக்கில் புதுச்சேரி போலீசார் காட்டிய அலட்சியம் பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி வினோதினி மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்தது. ஒருதலைக்காதல் காரணமாக சுரேஷ் தான் ஆசிட் வீசினான் என்று வினோதியின் தந்தை அன்று இரவே போலீசாரிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் உடனடியாக சுரேசை கைது செய்யவில்லை. மாறாக மறுநாள் மிக தாமதமாகத்தான் அவனை கைது செய்தனர்.

தகவல் சொன்னது யார்?

தீபாவளிக்கு காரைக்கால் வந்த வினோதினி வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும் நேரம் சுரேஷ்க்கு தெரிந்து உள்ளது. அதனால் தான் அதை எதிர்பார்த்து காத்திருந்து சுரேஷ் ஆசிட் வீசினான். சுரேசுக்கு தகவல் சொன்னவர்கள் யார்? என்பது பற்றி இதுவரை போலீசார் விசாரித்தது இல்லை.

நான்கு பேர் யார்?

வினோதினியின் மீது ஆசிட் வீசியதில் 4 பேர் சம்மந்தப்பட்டிருப்பதாக வினோதினியின் தந்தை, தாய்மாமா ஆகியோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனாலும் போலீசார் அதை கண்டு கொள்ளவே இல்லை.

சுரேசுக்கு ஆசிட் எப்படி கிடைத்தது? அதை விற்ற கடைக்காரர் யார்? போன்ற விவரங்களையும் சரியாக விசாரித்து வழக்கில் சேர்க்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கை போலீசார் அலட்சியமாகவே கையாண்டனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும்.

மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை

சுரேசின் உறவினர்கள் சிலர் வினோதினியின் தந்தை, மாமா ஆகியோரை மிரட்டியதாக தகவல்கள் வெளி வந்தன. மிரட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை எதுவும் நடத்தவில்லை. இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை ஒப்பிட்டு வினோதினி செய்திகளும் பத்திரிக்கைகளில் வந்தன. அதன் பிறகுதான் ஓரளவாவது நடவடிக்கை எடுத்தனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+