மன்னார்குடி திவாகரன் மீது தீராத கோபத்தில் அதிமுக தலைமை!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களுக்கு முன்பு திவாரகன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய சென்றுள்ளார். கோவிலுக்கு சென்ற அவருக்கு செயல் அலுவலர் சார்பில் சில உதவிகள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாராம்.
அதே போல, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் சுற்றுச்சூழல் சம்பந்தமான கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் திவாகரன் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு ஒரு கட்டுரையை சமர்பித்தாராம். இந்த கட்டுரைக்கு விருதும் கிடைத்துள்ளது. இந்த தகவல் அப்படியே மேலிடத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து கல்லூரி முதல்வர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications