தேனி பெண்ணுடன் மாயமான தென்காசி கல்லூரி மாணவர் மீட்பு
தென்காசி: தேனி பெண்ணுடன் மாயமான தென்காசி பாலிடெக்னிக் மாணவரை போலீசார் திருப்பூரில் மீட்டனர்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி தனலெட்சுமி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனலெட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திலேந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் தனலெட்சுமி திலேந்திரனுடன் தென்காசி பெருமாள் கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியேறினார். அப்போது பக்கத்து வீ்ட்டை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சுப்பிரமணியன் குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தனலெட்சுமிக்கும், சுப்பிரமணியன் மகன் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மணிகண்டன் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி கல்லூரிக்கு சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. மறுநாள் தனலெட்சுமியும், திலேந்திரனும் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். பல இடங்களில் தேடியும் மணிகண்டனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சுப்பிரமணியன் மனைவி லதா தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே லதா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் மாணவரை விரைவில் கண்டுபிடிக்க தென்காசி போலீசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கருவலூர் கிராமத்தில் தனலெட்சுமியுடன் மணிகண்டன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் முரளிகண்ணன் விசாரித்தபோது தன்னை யாரும் கடத்தவில்லை. நான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என மணிகண்டன் தெரிவித்தார். இதற்கிடையே மதுரை உயர் நீதிமன்றம் மாணவரை வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனால் மாணவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications