பட்ஜெட் தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்: பார்லி. வளாகத்தில் பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமனதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார்.
பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையுடன் தொடங்கியது. கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக பார்லிமெண்ட் வந்த பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இந்தியா பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கை எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு எவ்வாறு சந்திக்க உள்ளது என்பதை விளக்கும் வகையில் வரும் பட்ஜெட் அமையும் என்றார்.
மேலும் நாடு தற்போது சந்தித்துள்ள மிகப்பெரிய பிரச்னைகளை ஒருங்கிணைந்து சந்திக்க இந்த பார்லிமெண்ட் கூட்டத் தொடர் வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications