புனே பாணியில் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

புனே குண்டு வெடிப்பு
நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனே நகரில் இதேபோல் மக்கள் கூடும் இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. புனே குண்டுவெடிப்பும் சுமார் 7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. இதில் 9 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன்கள் அமைப்பு தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்ட அதே நேரத்தில் இந்துத்துவா சக்திகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடைய தயானந்த பாட்டீல் என்பவரது சைக்கிள் கடையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சைக்கிளில்தான் குண்டுகள் வெடித்ததாகக் கூறப்பட்டது.
பின்னர் இந்திய முஜாஹிதீன்கள் அமைப்பினர்தான் காரணம் என்று கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தங்களை சிறப்பு அதிரடிப்படையினர் சித்திரவதை செய்வதாகவும் புனே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் கூறியிருந்தனர்.
புனே பாணியில் குண்டு வெடிப்பு
இதனிடையே புனே குண்டுவெடிப்பு வழக்கில் இன்று மாலைதான் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே புனே பாணியிலான குண்டுவெடிப்பு சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. புனேயில் நிகழ்த்தியதைப் போலவே மக்கள் கூடுமிடங்களில் இரவு 7 மணி முதல் 7.15 வரையில் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. மோட்டார் சைக்கிளில் இருந்து வெடிக்காத குண்ட் ஒன்றும் கண்டு எடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications