ஹைதராபாத் குண்டுவெடிப்பு: பல ஆண்டுக் கனவுகளுடன் பரிதாபமாக செத்துப்போன இளைஞர்கள்

இதுபோன்ற ஒரு இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. ஹைதராபாத் நகரின் பரபரப்பான தில்சுக் நகரில் இரவு நேரத்தில் வெடித்த குண்டுகள் 14 பேரின் உயிரை காவு கொண்டு விட்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த 14 பேரில் பலியான பலர் இளைஞர்கள். அவர்களின் சடலங்கள் உஸ்மானியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 24 வயதான ராஜசேகர் சமீபத்தில்தான் சப்இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.
அதேபோல் இந்த சம்பவத்தில் பலியான விஜயகுமார்,முத்தியாலா ராஜூ, ஆகியோர் எம்.பி.ஏ. படித்துவருகின்றனர். இஜாஷ் அகமது முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர், முகம்மது ரபீக் 22 வயதான இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் ஏதாவது ஒரு கனவுகளை சுமந்தவாரே உயிரிழந்துள்ளனர். இது அவர்களின் சடலத்தை கண்டு கதறும் உறவினர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பாண்டு ரெங்கா ரெட்டி என்ற 22 வயது இளைஞர் தனது ஒரு காலை இழந்துவிட்டார். அவர் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பலரும் 7 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications