ஹைதராபாத் குண்டுவெடிப்பு- ஒருவேளை தெலுங்கானா செம்புலிகள் வேலையாக இருக்குமோ?

Subscribe to Oneindia Tamil

Hyderabad Blast
ஹைதராபாத்: நாட்டை உலுக்கியிருக்கும் ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்திய முஜாஹிதீன்கள் அல்லது ஹூஜி தீவிரவாத அமைப்புகளில் ஒன்று காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் ஏன் 'தெலுங்கானா செம்புலிகள்' இயக்கம் காரணமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பல்லாண்டுகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் அவ்வப்போது உறுதிமொழிகளை கொடுப்பதும் பின்னர் பின்வாங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 'தெலுங்கானா யுவசேனா' மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரால் தெலுங்கானா பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இனியும் மத்திய அரசை நம்பி பயனில்லை.. ஆயுத வழிப் போராட்டம் மூலமே தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வென்றெடுப்போம் என்று எச்சரித்திருந்தனர்.

மேலும் ஹைதராபாத் என்பது தெலுங்கானாவின் தலைநகராகத்தான் இருக்க வேண்டும். என்று தெலுங்கானா வலியுறுத்துவோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் வாழும் இதர ஆந்திர பகுதியினரை அச்சுறுத்தக் கூடும் வகையில் அல்லது வெளியேற்ற வைக்கும் வகையில் தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தினர் இப்படி ஒரு நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஆந்திர மாநில உளவுத்துறையிடம் இருக்கிறது.

அதுசரி எந்த புற்றுல எந்த பாம்பு இருக்குமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+