ரோட்டோரமாக உள்ள 1400 டாஸ்மாக் கடைகளை அகற்ற நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 1400 டாஸ்மாக் கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் டாஸ்மாக் நிர்வாக்ததின் கீழ் 6800 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 பேர் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர்.

இக்கடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வருவாயின் அளவு அதிகரித்து வந்தது. இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் முடிவுடன் ரூ.21 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இந்த வருவாய் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்களால் விபத்து அதிகம் நடந்து வருகிறது. இதனால் உயிர் பலி ஏற்படுவதுடன் ஏராளமான குடும்பங்கள் நிர்கதியாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள1400 கடைகளை வேறு இடத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+