ஓடும் பஸ்சிலிருந்து கீழே இழுத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை
நெல்லை: நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளி படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள பக்கபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் திவாகர். இவர் ராமையன்பட்டி அருகேயுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் கல்லூரி முடிந்து நெல்லை சந்திப்புக்கு வந்தார். அங்கிருந்து ஆழ்வார்கற்குளம் செல்லும் தனியார் பஸ்சில் முன்சீட்டில் அமர்ந்து ஊருக்கு சென்றார்.
அப்போது பாளை கேடிசி நகரில் இருந்து பஸ்சை ஒரு கார் பின் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அரியகுளம் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இருவர் இறங்கினர். அப்போது காரில் பின் தொடர்ந்த கும்பல் ஒரு மாணவரை பஸ்சில் இருந்து இழுத்து போட்டு அரிவாளால் சராமரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் இறந்தார்.
இதையடுத்து டிரைவர் பஸ்சை அங்கிருந்து வேகமாக எடுத்து சென்று விட்டார். சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் சோனமுத்து, பிரகாஷ், சாகுல் கமீது, சுகுமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் மாணவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications