கன்னியாகுமரியில் 'ஹைதராபாத்' சதிகாரன் பதுங்கல்?- வெடிகுண்டுகளுடன் அலைவதாக தகவல்!
ஹைதராபாத் தில்சுக் நகர் பேருந்து நிலைய பகுதியில் இருந்து குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் பேசப்பட்ட செல்போன் எண்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆய்வு செய்தனர். இதில் ஒரு செல்போன் எண் கன்னியாகுமரி பகுதியில் இருந்து பேசப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வெடிப்பு நடந்த மறுநாளில் இருந்து அந்த செல்போனின் சிக்னல் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்ளேயே இருந்து வெளியாவதும் தெரிய வந்தது. இது உளவுப்பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பி கன்னியாகுமரிக்கு வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகளுடன் காரில் சுற்றி திரிவதாகவும் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.