ஜெ. பிறந்தநாளில் எம்.எல்.ஏ. தலைமையில் 500 பேர் பால்குடம்: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
விருதுநகர்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி எம்.எல்.ஏ. தலைமையில் 500 பேர் பால்குடம் எடுத்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாளை ஆடம்பர விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ஜெயலலிதா அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி எம்.எல்.ஏ. உதயகுமார் பால்குடம் எடுத்தார்.
அவர் தலைமையில் 500 பேர் பால்குடம் எடுத்து சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு சென்றனர். இருக்கன்குடியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பால்குடம் எடுத்துச் சென்ற சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் பலியானார்.
வீட்டில் சும்மா இருந்தவரை பால்குடம் எடுக்குமாறு தொந்தரவு செய்தனர். பால்குடம் எடுத்துச் சென்றவரின் உயிரே போய்விட்டதே என்று காளியம்மாளின் உறவினர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications