10, 100 மலையேறிப் போச்சு… இனி 500, 1000 ரூபாய் நோட்டுதான்: ரிசர்வ் வங்கி
டெல்லி: இந்தியாவில் 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுக்கள் செலவழிப்பதும், அதன் பயன்பாடும் குறைந்து வருகிறதாம். அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் பற்றியும், இந்திய மக்களின் பணப்புழக்கம் பற்றியும், பணவீக்கம் பற்றியும் பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி சுவாரஸ்ய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

90 வரை 10 டூ 50
1990ம் ஆண்டுகள் வரை 10, 20, 50 ரூபாய் தாள்கள் பயன்பாடு அதிகம் இருந்த நிலையில், 1998 முதல்100 ரூபாய் தாள்கள் முன்னிலை பெற்றன.

2004க்குப் பிறகு ரூ. 500
2004ம் ஆண்டுக்குப் பிறகு, 500 ரூபாய் தாள்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

500 ரூபாயின் பங்கு 47%
2010 -11ல் மொத்த பணப்புழக்கத்தில் 500 ரூபாயின் பங்களிப்பு 47 சதவீதமாக இருந்துள்ளது. மாறாக, 100 ரூபாயின் பங்களிப்பு 14.8 சதவீதமாக மட்டுமே இருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ரூபாய் நோட்டுக்களின் பங்களிப்பு வெறும் 0.6 சதவீதம் மட்டுமே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கியத்துவத்தில் மாற்றம்
அதிகரிக்கும் விலைவாசி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுவரும் மாற்றம், பணப்பரிமாற்றத்தில் வந்துள்ள புதிய முறைகள் என பலவும், ரூபாய் நோட்டுக்களின் முக்கியத்துவத்தில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றத்துக்கு காரணம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

புத்தம் புதிய 1000 ரூபாய்
புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் 2000-வது ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், இப்போது 500 ரூபாய்க்கு அடுத்து, அதிக பங்களிப்பை தரும் கரன்சி தாளாக இது விளங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
-
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications