'சில்பான்ஸ்' பெர்லுஸ்கோனிக்கு ஆதரவாக கோஷமிட்ட 'டாப்லெஸ்' பெண்கள்!
மிலன்: இத்தாலி நாட்டில் முன்னாள் பிரதமர் பெர்லூஸ்கோனியைச் சுற்றி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவரது ஆட்சிக்காலத்தில் செக்ஸ் புகார்கள், ஊழல் புகார்கள் என எத்தனையோ செய்திகளில் அடிபட்டிருக்கிறார்.
செக்ஸ் புகார்கள், ஊழல் புகார்களில் சிக்கி பதவியை விட்டு விலகினார் பெர்லுஸ்கோனி. இப்போது மீண்டும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுகிறார் பெர்லூஸ்கோனி.
நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. தற்போது இத்தாலியின் பொருளாதார நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் மூலம் அமையும் புதிய அரசால் தான் அந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை சீரடையும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தலில் ஓட்டு போட மக்கள் நீண்ட "கியூ" வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

தேர்தல் களத்தில் பெர்லுஸ்கோனி
சில்வியோ பெர்லுஸ்கோனியும், ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் லுகி பெர்சானியும் களத்தில் உள்ளார். மிலன் நகரில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் ஓட்டு போட நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

ஓட்டுப் போட வந்த பெர்லுஸ்கோனி
இந்த வாக்குச் சாவடியில்தான் பெர்லுஸ்கோனிக்கு வாக்கு உள்ளது. அவர் ஓட்டு போடுவதற்காக அங்கு வந்தார்.

திடீரென பாய்ந்த மேலாடை அணியாத பெண்கள்
இந்த நிலையில் திடீரென அவர் முன்பு 3 பெண்கள் பாய்ந்து வந்தனர். அவர்கள் யாருமே மேலாடை அணிந்திருக்கவில்லை. டாப்லெஸ்ஸாக இருந்தனர். சில்வியோ பெர்லுஸ் கோனியே இந்த நாட்டின் பிரதமர் என வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

பதட்டம்- பரபரப்பு
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர்.

உக்ரைன் பெண்கள்
விசாரணையில், அவர்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண்கள் அமைப்பினர் என தெரிய வந்தது.
இப்படி மேலாடையின்றி டாப் லெஸ் ஆக பெண்கள் போராடுவது பேஷனாகி வருகிறது. சமீபத்தில் பாரீஸ் நகரில் போப்புக்கு ஆதரவாக டாப்லெஸ் பெண்கள் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவாயில்லை பெர்லுஸ்கோனிக்கு எங்கு போனாலும் பெண்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைக்கத்தான் செய்கிறது...












Click it and Unblock the Notifications