For Daily Alerts
Just In
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் தலைமையில் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் மார்ச் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் மார்ச் 16-ந் தேதியன்று இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஆராயப்பட இருக்கிறது. அப்போது இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக நவநீதம் பிள்ளை தயாரித்துள்ள அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இதன் பின்னர் மார்ச் 20-ந் தேதியன்று இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்கிறது. இந்தத் தீர்மானத்தை பல நாடுகளும் ஆதரிக்கக் கூடும் எனக் கூறப்பட்டாலும் இந்தியாவின் நிலை என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.
Comments
English summary
The UN Human Rights Council's 22nd regular meet at Geneva from today to 22 March.
Story first published: Monday, February 25, 2013, 13:29 [IST]