ரயில்வே பட்ஜெட் 2013-14 - தாக்கல் செய்தார் பன்சால்- 18 ஆண்டுக்குப் பின் முதல் காங். பட்ஜெட்
டெல்லி 2013-14ம் ஆண்டுக்கான ரயில்வேபட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
இது பன்சாலுக்கு முதல் பட்ஜெட்டாகும். அதேசமயம், காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் 18 ஆண்டுகள் கழித்து ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
இதுவரை தனது கூட்டணிக் கட்சிகளுக்கே ரயில்வே துறையை ஒதுக்கி வந்தது காங்கிரஸ். சமீபத்தில் திரினமூல் காங்கிரஸிடமிருந்து இத்துறையை மீ்ண்டும் தன் வசம் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கலாம்.

கடந்த 1994ம் வருடத்துக்குப் காங்கிரஸ் கட்சி ரயில்வே துறையை வகிக்கவில்லை. இப்போதுதான் கைக்கு வந்துள்ளது. அதுவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே அமைச்சகம் மாநிலக் கட்சியின் பிடியில் இல்லாமல் இப்போது தேசியக் கட்சியின் கட்டுக்குள் வந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ரயில்வேத் துறை அமைச்சராக பவன்குமார் பன்சால் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற உடனேயே, ரயில்வேத் துறையில் கூடுதல் வருமானத்தைப் பெருக்க, திடீர் கட்டண உயர்வை அறிவித்தார்.
இது பட்ஜெட்டில் இல்லாமல் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு 10 வருடங்களாக ரயில்வே பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இவ்வாறு பயணிகள் கட்டணம் சுமார் 21 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ரூ.6,600 கோடிக்கு கூடுதல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications