ராஜ்யசபாவில் இலங்கை போர்க் குற்றம் தொடர்பான சிறப்பு விவாதம் ஆரம்பம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா சார்பில் புதிய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து ராஜ்யசபாவில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் இதற்கான நோட்டீசுகளை கொடுத்திருந்தனர். பாஜகவின் வெங்கையா நாயுடு மற்றும் சிவசேனாவின் சஞ்சய் ராவட் ஆகியோரும் இது குறித்து கடிதம் கொடுத்தனர்.
இன்று பகல் 12 மணியளவில் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் தீர்மானத்தைத் தாக்கல் செய்ய தற்போது சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications