வருண் காந்தி விடுதலை: மத வெறுப்புணர்வை தூண்டிய வழக்கில் சாட்சியில்லை
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக உள்ள வருண் காந்தி, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, உத்தரபிரதேசத்தில் போட்டியிட்ட பிலிபிட் தொகுதியில் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர், 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் பெற்று வெளியே வந்த வருண், தாம் மத மோதலை தூண்டும் நோக்கத்தில் பேசவில்லை என்று தெரிவித்தார். பின்னர் பிலிபிட் தொகுதியில் அவர் வெற்றியும் பெற்றார்.
இந்த வழக்கில் 51 பேரை, சாட்சிகளாக உத்தரபிரதேச போலீசார் சேர்த்திருந்தும், யாரும் வருணுக்கு எதிராக சாட்சியமளிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து வருணை விடுவித்து, பிலிபிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், மற்றொரு வழக்கு வருண் மீது நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications