மும்பை பலாத்கார சம்பவம்: நாடாளுமன்றத்தில் ஷிண்டே பேச்சு 'அவைக் குறிப்பிலிருந்து' நீக்கம்!

மும்பை புறநகரான பந்த்ராவில் 3 சிறுமிகள் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஷிண்டே தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான அறிக்கையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ராஜ்யசபாவில் இதை சுட்டிக்காட்டிப் பேசிய அருண் ஜேட்லி, பாதிக்கப்பட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்திருக்கும் இந்த அறிக்கையை உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியும் இது தொடர்பாக அதிர்ச்சியைத் தெரிவித்தார்.
பின்னர் ஷிண்டேயின் அறிக்கையில் பெயர்கள் இடம்பெற்ற பத்தியை அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேசிய சுஷில்குமார் ஷிண்டே, நான் தாக்கல் செய்த அறிக்கையை திரும்பப் பெறுகிறேன். ராஜ்யசபா தலைவரும் எனது அறிக்கையைப் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த உள்துறை செயலரிடம் கூறியிருக்கிறேன் என்றார் அவர்.
பொதுவாக எம்.பிக்களின் பேச்சுகள் அவைக் குறிப்பில் நீக்கப்படலாம்.. ஒரு அமைச்சரின் அறிக்கையே நீக்கப்படுவது என்பதால் பார்லிமென்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications