200க்கும் மேற்பட்ட வழக்குகளை சுமந்து நிற்கும் டெல்லி நபர்... கோவையிலும் கைவரிசை!

Subscribe to Oneindia Tamil

கோவை: டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் என்ற 43 வயது நபரை கோவையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் கேரளப் போலீஸார்.

இந்த நபர் மீது கேரளாவில் மட்டும் 212 வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அத்தனையும் திருட்டு, கொள்ளை வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக கேரளாவில் வசித்து வரும் இந்த நபருக்குப் பொழுதுபோக்கே திருட்டும், கொள்ளையும்தான். கணக்கே இல்லாமல் கொள்ளையடித்துள்ளார், திருடியுள்ளார். தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் கோவை, பீளமேடு பகுதியில் 7 மாதங்களுக்கு முன்பு சங்கிலிப் பறிப்பில் அவர் ஈடுபட்ட விவரம் தெரிய வந்தது. இதுதொடர்பாக கோவை போலீஸிலும் வழக்குப் பதிவாகியுள்ளது.

இதையடுத்து நேற்று ஜிதேந்திர சிங்கை கேரளப் போலீஸார் கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பின்னர் 2 நாள் போலீஸ் காவலில் அவரை அனுமதித்து மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜிதேந்திர சிங்கை கோவை போலீஸார் கஸ்டடியில் எடுத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+